கரூர் அருள்மிகு ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் கார்த்திகை மாத தேய்பிறை பிரதோஷ வழிபாடு நிகழ்ச்சி смотреть онлайн

2 просмотров 02.12.2021 00:08:53

Описание видео

கரூர் அருள்மிகு ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் கார்த்திகை மாத தேய்பிறை பிரதோஷ வழிபாடு நிகழ்ச்சி நடைபெற்றது – பக்தர்கள் திராளானோர் கலந்து கொண்டு நந்தி எம்பெருமான் நடுவில் ஈஸ்வரனை தரிசித்து தோஷங்கள் தீர்த்தனர் தமிழக அளவில் மட்டுமில்லாமல், தென்னிந்திய அளவில் உள்ள சிவாலயங்களில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த சிவாலயங்களில் ஒன்று கரூர் அருள்மிகு ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயம்., கரூர் அருள்மிகு ஸ்ரீ அலங்காரவல்லி, அருள்மிகு ஸ்ரீ செளந்தரநாயகி உடனுறையாகிய அருள்மிகு ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் கார்த்திகை மாத தேய்பிறை பிரதோஷ நிகழ்ச்சி மிகவும் சிறப்பாக நடைபெற்றது. ஆநிலையப்பர் என்றழைக்கப்படும் அருள்மிகு ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரருக்கு முன்பு வீற்றிருக்கும் அருள்மிகு ஸ்ரீ நந்தி எம்பெருமானுக்கு பால், தயிர், பஞ்சாமிர்தம், விபூதி, சந்தனம், மஞ்சள் உள்ளிட்ட வாசனை திரவியங்கள் கொண்டு அபிஷேக ஆராதனை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கரூர், திண்டுக்கல், நாமக்கல், ஈரோடு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சார்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு நந்தி எம்பெருமான் அருள் பெற்றனர். மேலும், சோடஷம்ஹார நிகழ்ச்சிகளை தொடர்ந்து கும்ப ஆரத்தி, கற்பூர ஆரத்தி, நட்சத்திர ஆரத்தி, கோபுர ஆரத்திகளும், கற்பூர ஆரத்தி மற்றும் மகா தீபாராதனைகள் நடைபெற்றது. இதற்கான முழு ஏற்பாடுகளை கோயில் நிர்வாகமும், இந்து சமய அறநிலையத்துறையினரும் சிறப்பாக செய்திருந்தனர். மேலும், இந்நிகழ்ச்சியில் நந்தி எம்பெருமான் நடுவே ஈஸ்வரனை தரிசித்து கடவுள் அருள் பெற்று தோஷங்களை பக்தர்கள் தீர்த்தனர். Рекомендуем கரூர் அருள்மிகு ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் கார்த்திகை மாத தேய்பிறை பிரதோஷ வழிபாடு நிகழ்ச்சி посмотреть онлайн видео бесплатно и без регистрации!

Чат сообщества

Гость
Загрузка...
Теги:
ஆலயத